சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

300 ஆட்டங்களில் விளையாடிய என் பேச்சைக் கேட்க மறுக்கிறாய்: குல்தீப் யாதவிடம் கோபப்பட்ட தோனி!

கடுப்பான தோனி என்னிடம் வந்து, நான் என்ன முட்டாளா? நான் 300 ஆட்டங்களில் விளையாடியுள்ளேன்.

News image
Updated On :17 ஏப்ரல் 2020, 5:33 pm IST

கடந்த 20 வருடங்களாக தான் கோபப்பட்டதேயில்லை என தோனி என்னிடம் தெரிவித்தார் என்று சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.

இன்ஸ்டகிராம் விடியோ வழியாக குல்தீப் யாதவ் தெரிவித்ததாவது:

2017-ல் இந்தூரில் இலங்கைக்கு எதிரான டி20 ஆட்டம் அது. குசால் பெரேரா கவர் பகுதியில் ஒரு பவுண்டரி அடித்தார். உடனே விக்கெட் கீப்பராக இருந்த தோனி, ஃபீல்டிங்கை உடனே மாற்று எனக் கத்தினார். நான் அவர் சொன்னதைக் கேட்கவில்லை. அடுத்தப் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்து பவுண்டரி அடித்தார் பெரேரா.

கடுப்பான தோனி என்னிடம் வந்து, நான் என்ன முட்டாளா? நான் 300 ஆட்டங்களில் விளையாடியுள்ளேன். என் பேச்சைக் கேட்க மறுக்கிறாய் என்றார். நான் பயந்துவிட்டேன்.

ஆட்டம் முடிந்த பிறகு அணியினர் செல்லும் பேருந்தில் அவர் அருகில் அமர்ந்துகொண்டேன். இதுபோன்ற சூழலில் கோபப்படுவீர்களா என்று கேட்டேன். என்னை அவர் ஆறுதல்படுத்தினார். என்னிடமிருந்து சிறந்த பந்துவீச்சைக் கொண்டுவருவதற்காக அப்படிக் கத்தியதாகக் கூறினார். கடந்த 20 வருடங்களாக நான் கோபப்பட்டதேயில்லை எனப் பதில் அளித்தார் என்று தோனியுடனான அனுபவங்களை குல்தீப் யாதவ் பகிர்ந்துகொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.