திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

300 ஆட்டங்களில் விளையாடிய என் பேச்சைக் கேட்க மறுக்கிறாய்: குல்தீப் யாதவிடம் கோபப்பட்ட தோனி!

கடுப்பான தோனி என்னிடம் வந்து, நான் என்ன முட்டாளா? நான் 300 ஆட்டங்களில் விளையாடியுள்ளேன்.

News image
Updated On :17 ஏப்ரல் 2020, 5:33 pm IST

கடந்த 20 வருடங்களாக தான் கோபப்பட்டதேயில்லை என தோனி என்னிடம் தெரிவித்தார் என்று சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.

இன்ஸ்டகிராம் விடியோ வழியாக குல்தீப் யாதவ் தெரிவித்ததாவது:

2017-ல் இந்தூரில் இலங்கைக்கு எதிரான டி20 ஆட்டம் அது. குசால் பெரேரா கவர் பகுதியில் ஒரு பவுண்டரி அடித்தார். உடனே விக்கெட் கீப்பராக இருந்த தோனி, ஃபீல்டிங்கை உடனே மாற்று எனக் கத்தினார். நான் அவர் சொன்னதைக் கேட்கவில்லை. அடுத்தப் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்து பவுண்டரி அடித்தார் பெரேரா.

கடுப்பான தோனி என்னிடம் வந்து, நான் என்ன முட்டாளா? நான் 300 ஆட்டங்களில் விளையாடியுள்ளேன். என் பேச்சைக் கேட்க மறுக்கிறாய் என்றார். நான் பயந்துவிட்டேன்.

ஆட்டம் முடிந்த பிறகு அணியினர் செல்லும் பேருந்தில் அவர் அருகில் அமர்ந்துகொண்டேன். இதுபோன்ற சூழலில் கோபப்படுவீர்களா என்று கேட்டேன். என்னை அவர் ஆறுதல்படுத்தினார். என்னிடமிருந்து சிறந்த பந்துவீச்சைக் கொண்டுவருவதற்காக அப்படிக் கத்தியதாகக் கூறினார். கடந்த 20 வருடங்களாக நான் கோபப்பட்டதேயில்லை எனப் பதில் அளித்தார் என்று தோனியுடனான அனுபவங்களை குல்தீப் யாதவ் பகிர்ந்துகொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.