பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

நிதானமாகப் பந்துவீசிய இந்திய அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி!

4-வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி நிதானமாகப் பந்துவீசியதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2020, 10:04 am

4-வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி நிதானமாகப் பந்துவீசியதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது. 

நியூஸிலாந்துக்கு எதிரான 4-ஆவது டி-20 ஆட்டமும் முந்தைய ஆட்டம் போன்று டை ஆனதால் சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டது. இதில், இந்திய அணி வென்றதன் மூலம், இந்தத் தொடரின் முதல் 4 ஆட்டங்களையும் கைப்பற்றி வெற்றி நடையைத் தொடர்கிறது. 4 ஓவர்கள் வீசி 33 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஷர்துல் தாக்குர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்நிலையில் 4-வது டி20 ஆட்டத்தின்போது இந்திய அணி நிதானமாகப் பந்துவீசியதாக ஐசிசி குற்றம் சாட்டியுள்ளது. குறிப்பிட்ட நேரத்துக்குள் 2 ஓவர்கள் குறைவாக வீசியதால், இந்திய அணிக்கு ஆட்ட ஊதியத்திலிருந்து 40% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

5-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் பே ஓவல் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.