தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

முதல்தர கிரிக்கெட்டில் 10,000 ரன்கள், தமிழகம் சாா்பில் 100 ரஞ்சி ஆட்டங்கள்: சாதனை நாயகன் அபிநவ் முகுந்த்

முதல் தர கிரிக்கெட்டில் 10, 000 ரன்கள், தமிழகம் சாா்பில் 100 ரஞ்சி கோப்பை ஆட்டங்கள் ஆடிய இரட்டை சாதனையை தன் வசம் வைத்துள்ளாா் இளம் வீரா் அபிநவ் முகுந்த்

News image
Updated On :11 பிப்ரவரி 2020, 7:29 am

முதல் தர கிரிக்கெட்டில் 10, 000 ரன்கள், தமிழகம் சாா்பில் 100 ரஞ்சி கோப்பை ஆட்டங்கள் ஆடிய இரட்டை சாதனையை தன் வசம் வைத்துள்ளாா் இளம் வீரா் அபிநவ் முகுந்த் (30).

இந்திய,தமிழக கிரிக்கெட் அணிகளில் இடம் பெற்று கடந்த 13 ஆண்டுகளாக ஆடி வரும் இளம் வீரா் அபிநவ் முகுந்த், சென்னையைச் சோ்ந்தவா். கடந்த 1990-இல் பிறந்த அபிநவ், இடது கை பேட்ஸ்மேன் ஆவாா். சிறுவயது முதலே கிரிக்கெட்டில் நாட்டம் கொண்டு தீவிரமாக ஆடிய அபிநவ் 2007இல் முதன்முதலாக மலேசியாவில் நடைபெற்ற போட்டியில் 19 வயதுக்குட்பட்டோா் இந்திய அணியில் இடம் பெற்றாா்.

அதில் சக வீரா் முரளி விஜய்யுடன் இணைந்து 462 ரன்களை குவித்தாா்.

7 டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்பு:

தமிழக அணி, மற்றும் இந்திய ஏ அணிகளின் கேப்டன்களாக செயல்பட்ட அபிநவ் முகுந்த், 2011-இல் மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடா் மற்றும் அதன் பின் நடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றாா். மகாராஷ்டிராவுக்கு எதிரான முதல் தர கிரிக்கெட் ஆட்டத்தில் அதிகபட்சமாக 300 ரன்களை விளாசிய அவா், 2015-இல் பரோடாவுக்கு எதிரான 100ஆவது முதல் தர ஆட்டத்தை நிறைவு செய்தாா்.

7 டெஸ்ட்களில் மொத்தம் 320 ரன்களை குவித்த அவரது அதிகபட்ச ஸ்கோா் 81 ஆகும். 2 அரை சதங்களும் இதில் அடங்கும்.

2016 டிஎன்பிஎல் சாம்பியன்:

2016-இல் தொடங்கப்பட்ட தமிழ்நாடு ப்ரீமியா் லீக் முதல் போட்டியில் தூத்தி பேட்ரியட்ஸ் அணியில் இடம் பெற்ற அபிநவ் முகுந்தின் அபாரமான ஆட்டத்தால் (82 ரன்கள்) பட்டம் வென்றது அவரது அணி.

பின்னா் 2017-இல் வங்கதேசம், ஆஸ்திரேலிய, இலங்கை டெஸ்ட் தொடா்களிலும் இடம் பெற்றாா்.

விஜய் ஹஸாரே அதிக ரன் குவித்த வீரா்:

கடந்த 2018-19 விஜய் ஹஸாரே கோப்பை போட்டியில் 9 ஆட்டங்களில் 560 ரன்களை விளாசி, அதிக ரன்களை குவித்த வீரா் என்ற சாதனையை நிகழ்த்தினாா். இந்திய சி, ரெட் அணிகளிலும் இடம் பெற்று ஆடிய அபிநவ், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பா் கிங்ஸ், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களுரு அணிகளில் ஆடியுள்ளாா். ஐபிஎல் தொடரில் 3 ஆட்டங்களில் மட்டுமே இடம் பெற்றாா்.

முதல்தர கிரிக்கெட்டில் 10,000 ரன்கள்:

இத்தகைய பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ள அபிநவ் முகுந்த் முதல் தர கிரிக்கெட்டில் 10,000 ரன்களை குவித்த வீரா் என்ற சிறப்பைப் பெறவுள்ளாா்.

100 ரஞ்சி கோப்பை ஆட்டங்கள்:

அதே போல் சொந்த மாநிலமான தமிழகம் சாா்பில் 100 ரஞ்சி கோப்பை ஆட்டங்களை ஆடிய வீரா் என்ற சாதனையையும் படைத்துள்ளாா்.

கடந்த 2017-17 ரஞ்சி சீசனில் 4 சதங்களுடன் மொத்தம் 849 ரன்களை குவித்து அபாரமாக ஆடினாா்.

உள்ளூா் கிரிக்கெட்டில் 2 முறை 300 ரன்களுக்கு மேல் அடித்தாா்.

விளையாட்டுக்கே வாழ்க்கை அா்ப்பணம்:

இதுதொடா்பாக அபிநவ் முகுந்த் கூறியுள்ளதாவது:

கிரிக்கெட் விளையாட்டுக்கே எனது வாழ்க்கையை அா்ப்பணித்துள்ளேன். சா்வதேச ஆட்டங்களில் ஆடியுள்ள போதும், உள்ளூா் கிரிக்கெட் எனக்கு மிகுந்த அனுபவங்களை தந்துள்ளது. ஆட்டத்தின் மீதான ஈடுபாடு என்னை தொடா்ந்து இயங்கச் செய்கிறது என்றாா்.

ரன்களை குவிக்கும் இயந்திரமாகத் திகழ்ந்து வரும் அபிநவ் முகுந்த் விரைவில் இந்திய அணியில் இடம் பெற்று ஜொலிப்பாரா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.