தென் ஆப்பிரிக்காவில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பைப் போட்டி கடந்த வாரம் தொடங்கியது.
இலங்கைக்கு எதிரான முதல் ஆட்டத்தை 90 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி இன்று ஜப்பானை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இந்திய அணியின் அற்புதமான பந்துவீச்சாலும் மோசமான பேட்டிங்கினாலும் ஜப்பான் அணி, 22.5 ஓவர்களில் 41 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக இரு பேட்ஸ்மேன்கள் தலா 7 ரன்கள் எடுத்தார்கள். 5 பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆனார்கள். இந்திய அணித் தரப்பில் ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளும் கார்த்திக் தியாகி 3 விக்கெட்டுகளும் ஆகாஷ் சிங் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.