கச்சத்தீவு சென்று திரும்பியோருக்கு ராமேஸ்வரத்தில் மருத்துவ பரிசோதனை
கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழாவிற்குச் சென்று திரும்பியவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.


கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழாவிற்குச் சென்று ராமேஸ்வரம் திரும்பியவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.
கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழாவையொட்டி, ராமேஸ்வரத்தில் இருந்து 90க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3000 பக்தர்கள் பயணம் மேற்கொண்டனர்.
ஏற்கெனவே கரோனா வைரஸ் அச்சம் காரணமாக பக்தர்கள் அனைவரும் முழுமையாக பரிசோதனை செய்த பின்னரே கச்சத்தீவு அனுப்பப்பட்டனர். தொடர்ந்து, கச்சத்தீவு சென்று திரும்பிய தமிழர்களுக்கு ராமேஸ்வரம் துறைமுகத்தில் வைத்து மருத்துவக்குழு பரிசோதனை செய்து வருகிறது.
இதற்காக ராமேஸ்வரம் துறைமுகத்தில் 4 சிறப்பு மருத்துவக் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...