முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று ரஞ்சி கோப்பையை முதல்முறையாக வென்ற செளராஷ்டிரம்

இறுதிச்சுற்றில் செளராஷ்டிர அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று முதல்முறையாக ரஞ்சி கோப்பையை வென்றுள்ளது. 
முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று ரஞ்சி கோப்பையை முதல்முறையாக வென்ற செளராஷ்டிரம்
Updated on
1 min read

ராஜ்கோட்டில் நடைபெற்ற பெங்கால் - செளராஷ்டிரம் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்றில் செளராஷ்டிர அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று முதல்முறையாக ரஞ்சி கோப்பையை வென்றுள்ளது. 

டாஸ் வென்ற செளராஷ்டிரம் அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆடுகளம் ரன்களைச் சேர்க்க கடினமாக இருந்ததால் முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் அனைவரும் நிதானமாகவும் பக்குவமாகவும் விளையாடினார்கள். 31 வயது அர்பித் வசவதா106 ரன்களும் புஜாரா 66 ரன்களும் எடுத்தார்கள். பரோட், வி.எம். ஜடேஜா ஆகிய இருவரும் அரை சதம் எடுத்தார்கள். 171.5 ஓவர்கள் வரைக்கும் விளையாடி 425 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது செளராஷ்டிரம் அணி. பெங்கால் அணியில் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளும் ஷபாஸ் அஹ்மது 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த பெங்கால் அணி, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற கடுமையாகப் போராடியது. கடைசியில் 161 ஓவர்கள் வரை விளையாடி 381 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. சேட்டர்ஜி 81 ரன்கள் எடுத்தார். டி.ஏ. ஜடேஜா 3 விக்கெட்டுகளும் உனாட்கட், மன்கட் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

செளராஷ்டிரம் அணி, 2-வது இன்னிங்ஸில் 34 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் டிரா ஆனது.  முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் செளராஷ்டிரம் அணி, முதல்முறையாக ரஞ்சி கோப்பையை வென்றது. இதற்கு முன்பு நவாநகர், மேற்கு இந்தியா ஆகிய பெயர்களில் இருந்தபோது இருமுறை ரஞ்சி கோப்பையை வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com