சிஎஸ்கே உடையை முதலில் அணிந்தபோது விசித்திரமாக இருந்ததாக ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
சிஎஸ்கேவுடனான இன்ஸ்டகிராம் உரையாடலில் ஹர்பஜன் சிங் கூறியதாவது:
சிஎஸ்கே உடையை முதலில் அணிந்தபோது விசித்திரமாக இருந்தது. என்னது இது? கனவு தானா என எண்ணினேன். எப்போதெல்லாம் மும்பை அணி சிஎஸ்கேவுடன் மோதுகிறதோ அப்போதெல்லாம் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டமாகவே கருதப்படும். ஆட்டம் சவாலானதாக இருக்கும். திடீரென மும்பை அணி உடையை அணியாமல் சென்னை அணியின் உடையை அணிந்தபோது எனக்குக் கடினமாக இருந்தது. இதற்குப் பழகுவதற்குச் சிறிது நாளானது.
2018-ல் முதலிலேயே மும்பைக்கு எதிராக விளையாடினோம். அதனால் நல்லவேளை இந்த ஆட்டம் சீக்கிரமே நடந்து முடிந்தது எனத் தோன்றியது. முதல் சீஸன் முழுக்க எனக்கு விசித்திரமாகவே இருந்தது. இரண்டாவது சீஸனில் அந்தளவுக்கு இல்லை என்று கூறினார்.
ஐபிஎல் போட்டியில் 2008 முதல் 2017 வரை 10 ஆண்டுகள் மும்பை அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங், 2018-ம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஈரானுக்கு விரைவில் பதிலடி; தயார்நிலையில் ராணுவம்! - அஜர்பைஜான் அறிவிப்பு!

முதல்வர் நிதீஷ்குமார் ராஜிநாமா? வீட்டின்முன்பு தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!

உலக நாடுகள் செலுத்திய வரியை வட்டியுடன் திருப்பி செலுத்த அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

2-வது அரையிறுதி: இந்தியா பேட்டிங்!
வீடியோக்கள்

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் ஆர்ச்சரின் சவாலைச் சமாளிப்பாரா சஞ்சு ?
தினமணி வீடியோ செய்தி...

