ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

டெஸ்ட் தொடரில் முழுமையான தோல்வி: இந்திய அணிக்கு மைக்கேல் கிளார்க் எச்சரிக்கை

ஒருநாள், டி20 தொடர்களில் இந்திய அணியால் ஜெயிக்க முடியாவிட்டால் டெஸ்ட் தொடரில்...

News image
Updated On :24 நவம்பர் 2020, 8:29 am

DIN

ஒருநாள், டி20 தொடர்களில் இந்திய அணியால் ஜெயிக்க முடியாவிட்டால் டெஸ்ட் தொடரில் சிக்கல் ஏற்படும்: ஆஸி. முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடவுள்ளது. ஒருநாள் தொடர் நவம்பர் 27-லிலும் டி20 தொடர் டிசம்பர் 4-லிலும் டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-லிலும் தொடங்குகின்றன.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஒரு பேட்டியில் கூறியதாவது:

ஒருநாள், டி20 தொடர்களில் விராட் கோலியால் அணியை நன்கு வழிநடத்தி ஜெயிக்க முடியும். வெற்றிகளை கோலி ஆரம்பித்து வைத்தால் பிறகு இந்தியாவுக்கு அவர் திரும்பிய பிறகு இந்திய அணியால் டெஸ்ட் தொடரில் நன்கு விளையாட முடியும். ஒருநாள், டி20 தொடர்களில் இந்திய அணியால் ஜெயிக்க முடியாவிட்டால் டெஸ்ட் தொடரில் 4-0 என முழுமையாகத் தோல்வியடைய நேரிடும். 

வித்தியாசமான ஆக்‌ஷனுடன் வேகமாகப் பந்துவீசுகிறார் பும்ரா. அவர் ஆக்ரோஷமாக விளையாடி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக விளங்க வேண்டும். வார்னர், ஸ்மித்துக்கு நிறைய தொந்தரவுகளை பும்ரா அளித்துள்ளார். கோலியும் பும்ராவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.