சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கோபத்தால் உண்டான விளைவு: யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து பிரபல வீரர் ஜோகோவிச் தகுதியிழப்பு

இந்த வருட யு.எஸ். ஓபன் போட்டியை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரபல வீரர் ஜோகோவிச்...

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:16 pm

DIN

இந்த வருட யு.எஸ். ஓபன் போட்டியை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரபல வீரர் ஜோகோவிச், நான்காவது சுற்றில் விதிமுறையை மீறிய காரணத்துக்காகத் தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளார். இதனால் போட்டியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். 

யு.எஸ். ஓபன் போட்டியின் 4-வது சுற்றில் பப்லோ கர்ரேனோ பஸ்டாவை எதிர்கொண்டார் ஜோகோவிச். முதல் செட்டில் பப்லோ 6-5 என முன்னிலை பெற்றிருந்தபோது கோபத்துடன் பந்தைப் பின்னால் அடித்தார் ஜோகோவிச். அது லைன்ஸ்மேன் மீது பட்டதால் உடனடியாக ஜோகோவிச் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விதிமுறையை மீறிய குற்றத்துக்காக உடனடியாகத் தகுதியிழப்பு செய்யப்பட்டார் ஜோகோவிச். இதனால் போட்டியிலிருந்து அவர் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. வேண்டுமென்றே பந்தை லைன்ஸ்மேன் மீது அடித்ததால் இந்த நடவடிக்கை எடுத்ததாக யு.எஸ். ஓபன் போட்டி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

YouTube video thumbnail

நடந்த சம்பவத்துக்காக வருத்தப்படுகிறேன். லைன்ஸ்மேன் மீது பந்து பட்ட பிறகு அவருக்குப் பாதிப்பு இல்லை எனப் பார்த்துக்கொண்டேன். அவருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் வேண்டுமென்றே செய்யவில்லை. இதிலிருந்து நான் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். நல்ல வீரராகவும் மனிதனாகவும் நான் மாற வேண்டும். என் நடத்தைக்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இந்த வருட யு.எஸ். ஓபன் போட்டி காலி அரங்கில் செப்டம்பர் 13 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.