அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஆர்சிபி வீரருக்கு கரோனா பாதிப்பு

ஐபிஎல் 2021 ஏலத்தில் ஆர்சிபி அணி இவரை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது. 

News image
ஆர்சிபி அணி (கோப்புப் படம்)
Updated On :25 ஆகஸ்ட் 2021, 6:56 am

DIN

வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 ஆட்டங்களில் பங்கேற்கிறது நியூசிலாந்து அணி. இதற்காக டாக்காவுக்கு நியூசிலாந்து வீரர்கள் வந்துள்ளார்கள். இந்நிலையில் டாக்காவுக்கு வந்த நியூசி. வீரர் ஃபின் ஆலன் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் ஹண்ட்ரெட் போட்டியில் விளையாடிவிட்டு கடந்த 20-ம் தேதி டாக்காவுக்கு வந்தார் 22 வயது ஃபின் ஆலன். இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்ட ஆலனுக்கு லேசான கரோனா அறிகுறிகளே உள்ளன. இதனால் அணியினர் தங்கும் விடுதியில் அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இரு நாள்கள் தொடர்ச்சியாகப் பரிசோதனை செய்து அதில் கரோனா இல்லை என்று உறுதியானால் மட்டுமே அணியினருடன் ஃபின் ஆலனால் இணைய முடியும். ஃபின் ஆலன், நியூசி. அணிக்காக 3 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஐபிஎல் 2021 ஏலத்தில் ஆர்சிபி அணி இவரை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது. 

மூன்று நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு ஆகஸ்ட் 27 முதல் அனைத்து நியூசி. வீரர்களும் பயிற்சியைத் தொடங்குவார்கள். 

செப்டம்பர் 1 முதல் தொடங்கும் டி20 தொடர், 10-ம் தேதி நிறைவடைகிறது. 

Dreams do come true , Finn!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.