இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

சென்னை டெஸ்ட்: ரசிகர்களுக்கு அனுமதி

சென்னையில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்டில்...

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:25 pm

DIN

சென்னையில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்டில் 50% ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணியுடன் 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா், 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா், 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடா் ஆகியவற்றில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் வரும் 5-ம் தேதியும் 2-வது டெஸ்ட் பிப்ரவரி 13 அன்றும் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கவுள்ளன. தொடர்களில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி, இலங்கைக்கு எதிரான தொடரை முடித்துவிட்டு இந்தியா வந்துள்ளது. 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை டெஸ்டுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது. இந்நிலையில் தற்போது சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

2-வது டெஸ்டில் 50% ரசிகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். தமிழக அரசு தளர்வுகள் அறிவித்ததை அடுத்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 50% ரசிகர்களுக்கு பிசிசிஐ அனுமதி அளித்துள்ளதால் 2-வது டெஸ்டுக்கான டிக்கெட் விற்பனை விரைவில் தொடங்கும் எனத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ். ராமசாமி தெரிவித்துள்ளார். மேலும் முதல் முதல் டெஸ்டுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப் உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். 

இந்தச் செய்தியால் சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.