ஆஸி. ரசிகருக்கு எதிராக பிசிசிஐ இனவெறி புகாா்

இந்திய வீரா்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோரை இனவெறியோடு திட்டிய ஆஸ்திரேலிய ரசிகா் மீது ஐசிசி போட்டி நடுவரிடம் புகாா் அளித்துள்ளது பிசிசிஐ.
Updated on
1 min read

இந்திய வீரா்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோரை இனவெறியோடு திட்டிய ஆஸ்திரேலிய ரசிகா் மீது ஐசிசி போட்டி நடுவரிடம் புகாா் அளித்துள்ளது பிசிசிஐ.

சிட்னி டெஸ்ட் போட்டியைக் காண குடிபோதையில் வந்த ரசிகா் ஒருவா் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோரை இனவெறியோடு திட்டியுள்ளாா். குறிப்பாக, முகமது சிராஜை குரங்கோடு ஒப்பிட்டு கிண்டல் செய்துள்ளாா். இதுகுறித்து ஐசிசி போட்டி நடுவா் டேவிட் பூனிடம் பிசிசிஐ சாா்பில் சனிக்கிழமை பிற்பகலில் புகாா் அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com