கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

கேரளத்தில் புதிதாக 6,282 பேருக்கு கரோனா

கேரளத்தில் புதிதாக 6,282 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :30 ஜனவரி 2021, 2:29 pm


கேரளத்தில் புதிதாக 6,282 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை 59,759 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 10.51 சதவிகிதம்.

மேலும் 7,032 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும் 18 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 3,722 ஆக உயர்ந்துள்ளது.

71,469 பேர் இன்னும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,17,434 பேர் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கேரளத்தில் கடந்தாண்டு இதே தினம்தான் முதல் கரோனா பாதிப்பு பதிவானது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.