புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ரிஷப் பந்துக்கு கரோனா பாதிப்பு: தகவல்

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ரிஷப் பந்த், கடந்த ஒரு வாரமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக...

News image
Updated On :15 ஜூலை 2021, 6:37 am

DIN

இங்கிலாந்தில் யூரோ கோப்பைப் போட்டியை நேரில் கண்டுகளித்த இந்திய வீரர் ரிஷப் பந்த் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 முதல் தொடங்குகிறது. இதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்கள் டர்ஹமில் பயிற்சியைத் தொடங்குகிறார்கள். ஜூலை 20 முதல் தொடங்கும் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். 

இங்கிலாந்தில் உள்ள இந்திய வீரர்களில் இருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அதில் ஒரு வீரருக்குச் சமீபத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா இல்லை என்று உறுதியானதாகவும் மற்றொரு வீரருக்குப் பாதிப்பு இருந்தாலும் நலமுடன் இருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. 10 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அந்த வீரருக்கு வரும் ஞாயிறன்று மீண்டும் பரிசோதனை நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட வீரர், ரிஷப் பந்த் எனத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற இங்கிலாந்து - ஜெர்மனி அணிகளுக்கு இடையிலான யூரோ கோப்பை ஆட்டத்தை நேரில் கண்டுகளித்தார் ரிஷப் பந்த். இதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ரிஷப் பந்த், கடந்த ஒரு வாரமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. அவருக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லாததால் விரைவில் மீண்டு வந்து இந்திய அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவார் என அறியப்படுகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்ட வீரரின் பெயர் பற்றி பிசிசிஐ இதுவரை தகவல் தெரிவிக்கவில்லை.

பிசிசிஐயின் துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 

ஒரு வீரர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த எட்டு நாள்களாக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அணியினர் தங்கும் விடுதியில் அவர் தங்கவில்லை. எனவே இதர வீரர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை. எனினும் கரோனாவால் பாதிக்கப்பட்ட வீரரின் பெயரைச் சொல்ல முடியாது எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.