இங்கிலாந்தில் முக்கியமான போட்டிகளை நடத்த வேண்டாம்: பிரபல வீரர் பீட்டர்சன் கோரிக்கை

இதைச் சொல்ல வேதனையாக உள்ளது...
இங்கிலாந்தில் முக்கியமான போட்டிகளை நடத்த வேண்டாம்: பிரபல வீரர் பீட்டர்சன் கோரிக்கை
Published on
Updated on
1 min read

இங்கிலாந்தில் முக்கியமான போட்டிகளை  நடத்த வேண்டாம் எனப் பிரபல வீரர் பீட்டர்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் 4-ஆம் நாள் ஆட்டமும் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. தொடக்க நாளான வெள்ளிக்கிழமை ஆட்டமும் மழை காரணமாக டாஸ் கூட வீசப்படாமல் கைவிடப்பட்ட நிலையில், தற்போது திங்கள்கிழமை ஆட்டமும் முற்றிலுமாக கைவிடப்பட்டது. மழை காரணமாக தொடா்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த இறுதி ஆட்டம் டிரா ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கணிக்கப்படுகிறது. அவ்வாறு ஆட்டம் டிரா ஆகும் பட்சத்தில் சாம்பியன்ஷிப் பட்டம் இரு அணிகளுக்கும் பகிா்ந்தளிக்கப்படும்.

தற்போதைய நிலையில், டாஸ் வென்ற நியூசிலாந்து ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்ஸில் 92.1 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் அடித்துள்ளது. பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து, ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் 49 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் பற்றி இங்கிலாந்தின் பிரபல முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியதாவது:

இதைச் சொல்ல வேதனையாக உள்ளது. முக்கியமான மற்றும் ஓர் ஆட்டத்தில் முடிவு காணப்படும் ஆட்டங்களை எல்லாம் இங்கிலாந்தில் நடத்தக் கூடாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com