மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

2-வது ஒருநாள்: இந்திய மகளிர் அணிக்கு எதிராக 157 ரன்களுக்கு ஆட்டமிழந்த தெ.ஆ. அணி

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 157 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

News image

ஜூலான் கோஸ்வாமி (கோப்புப் படம்)

Updated On :9 மார்ச் 2021, 7:32 am

DIN

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 157 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

கரோனா சூழலில் கடந்த ஓராண்டுக்குப் பிறகு இந்திய மகளிரணி சர்வதேசத் தொடரில் முதல்முதலாக விளையாடுகிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலை பெற்றது.

லக்னௌவில் இன்று நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 157 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. லாரா குட்ஆல் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார். இந்திய அணித் தரப்பில் ஜூலான் கோஸ்வாமி 4 விக்கெட்டுகளையும் ராஜேஸ்வரி 3 விக்கெட்டுகளையும் மன்சி ஜோஷி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.