கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

2022 ஆஸ்திரேலிய ஓபன் போட்டி வேறு நாட்டில் நடைபெறவுள்ளதா?

வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்புக்காக அரசிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம்...

News image
2019 ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்துடன் ஜோகோவிச்
Updated On :27 ஜனவரி 2024, 8:15 pm

DIN

கரோனா அச்சுறுத்தல் காரணமாக 2022 ஆஸ்திரேலிய ஓபன் போட்டி வேறு இடத்தில் நடைபெறும் என்று வெளியான செய்திகளை டென்னிஸ் ஆஸ்திரேலியா மறுத்துள்ளது.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் போட்டி வழக்கமாக மெல்போர்னில் நடைபெறும். எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக 2022 ஆஸ்திரேலிய ஓபன் போட்டி வேறு இடத்துக்கு மாற்றப்படுவதாகவும் 2022 ஜூன் வரை சர்வதேச எல்லைகள் மூடப்பட வாய்ப்புள்ளதால் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியை துபாய் அல்லது தோஹாவில் நடத்த வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் 14 நாள்களுக்குத் தங்கும் விடுதியில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற ஆஸ்திரேலிய அரசின் விதிமுறையை டென்னிஸ் வீரர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற திட்டமிடப்பட்டு வருவதாகவும் வெளியான செய்திகளை டென்னிஸ் ஆஸ்திரேலியா மறுத்துள்ளது.

2021 ஆஸ்திரேலிய ஓபன் போட்டியை கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெற்றிகரமாக நடத்தினோம். 2022 போட்டியை ஜனவரியில் நடத்தவுள்ளோம். சிறந்த வீரர்களைக் கொண்டு ஆஸ்திரேலிய ஓபன் போட்டியை மீண்டும் மெல்போர்னில் நடத்தவே விரும்புகிறோம். வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்புக்காக அரசிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என டென்னிஸ் ஆஸ்திரேலியா அறிக்கை வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.