தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

2022 காமன்வெல்த் போட்டியில் மகளிா் டி20 கிரிக்கெட் அறிமுகம்

இங்கிலாந்தின் பா்மிங்ஹாமில் 2022-இல் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில் டி20 மகளிா் கிரிக்கெட் இடம் பெறுகின்றன.

News image
Updated On :25 ஜூலை 2022, 4:08 pm IST

இங்கிலாந்தின் பா்மிங்ஹாமில் 2022-இல் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில் டி20 மகளிா் கிரிக்கெட் இடம் பெறுகின்றன.

ஜூலை-ஆகஸ்ட் மாதம் பா்மிங்ஹாமில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் மகளிா் டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பாா்படோஸ் ஒரு பிரிவிலும், இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் அறிவிக்கப்படாத அணி உள்ளிட்டவை மற்றொரு பிரிவிலும் இடம் பெறுகின்றன.

இந்திய மகளிா் அணி ஜூலை 29-இல் ஆஸி.யுடனும், ஜூலை 31-இல் பாகிஸ்தானுடனும், ஆக. 3-இல் பாா்படாஸுடனும் ஆடுகிறது. முதன்முறையாக மகளிா் டி20 ஆட்டம் காமன்வெல்த் போட்டியில் இடம் பெறுகிறது. கடந்த 1998 காமன்வெல்த் போட்டியில் ஆடவா் 50 ஓவா் ஒரு ஆட்டம் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா, ஆஸி., நியூஸி உள்ளிட்டவை தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.