காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

நேற்றிரவு என்னால் தூங்கவே முடியவில்லை: ஷ்ரேயஸ் ஐயர்

நேற்றிரவு நன்கு தூங்குவேன் என எதிர்பார்த்தேன். ஆனால்...

News image
Updated On :26 நவம்பர் 2021, 11:47 am

சதமடிக்க ஆர்வமாக இருந்ததால் நேற்றிரவு தூங்க முடியவில்லை என ஷ்ரேயஸ் ஐயர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரஹானே, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இந்திய அணியில் ஸ்ரேயஸ் ஐயரும் நியூசி. அணியில் ரச்சின் ரவீந்திராவும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகம் ஆகியுள்ளார்கள். 

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 111.1 ஓவர்களில் 345 ரன்கள் எடுத்தது. அறிமுக டெஸ்டில் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர், 157 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் சதமடித்தார். அதன்பிறகு 105 ரன்களில் செளதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் நாள் முடிவில் ஷ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் எடுத்திருந்தார். 2-ம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 57 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் எடுத்துள்ளது.

சதமடித்தது பற்றி ஷ்ரேயஸ் ஐயர் கூறியதாவது:

முதல் நாளில் இருந்து நடந்த அனைத்திற்கும் மகிழ்ச்சியாக உள்ளேன். நேற்றிரவு நன்கு தூங்குவேன் என எதிர்பார்த்தேன். ஆனால் என்னால் தூங்கவே முடியவில்லை. கவாஸ்கர், அறிமுக டெஸ்டுக்கான தொப்பியை எனக்கு வழங்கினார். அவர் மிகவும் ஊக்கம் அளித்தார். சதமடித்தது நிறைவைத் தந்தது என்றார். 
 

Related Article

முதல் டெஸ்ட்: இந்தியாவுக்குப் பதிலடி தந்த நியூசிலாந்து, 129/0

உருமாறிய புதிய வகை கரோனா: இந்திய கிரிக்கெட் அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்துக்குச் சிக்கலா?

நெ.10 மாரடோனா: மகத்தான வாழ்வும் சாதித்த தருணங்களும்

சிஎஸ்கேவுக்கு சஞ்சு சாம்சன் இல்லை: கேப்டனாக மீண்டும் தக்கவைத்துக்கொள்ளும் ராஜஸ்தான்!

தில்லி கேபிடல்ஸ் அணி தக்கவைக்கும் 4 வீரர்கள்: வெளியான தகவல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.