பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஒவ்வொருவருக்கும் 150 ஆட்டங்களில் விளையாடிய அனுபவம்: தினேஷ் கார்த்திக் எந்த அணியைப் புகழ்கிறார்?

ஏராளமான டி20 அனுபவங்களைக் கொண்ட வீரர்கள் உள்ளார்கள். 150 முதல் 200 டி20 ஆட்டங்களில் விளையாடிய...

News image
Updated On :18 ஆகஸ்ட் 2021, 11:42 am

DIN

இந்திய அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் 150 டி20 ஆட்டங்களில் விளையாடிய அனுபவம் உள்ளது என விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். 

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி பற்றி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:

ஐபிஎல் போட்டி கடந்த 14 வருடங்களாக நடைபெறுகிறது. எனவே இந்திய அணியில் ஏராளமான டி20 அனுபவங்களைக் கொண்ட வீரர்கள் உள்ளார்கள். 150 முதல் 200 டி20 ஆட்டங்களில் விளையாடிய அனுபவம் இந்திய வீரர்களுக்கு உள்ளது. இதனால் முக்கியமான தருணங்களில் இருந்து போதுமான தகவல்களை அவர்கள் பெற்றுள்ளார்கள். பெரிய போட்டிகளில் அழுத்தமான தருணங்களைக் கையாள இந்த அனுபவம் அவசியமாகிறது. எனவே இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. நொடியில் ஆட்டத்தைத் தன் பக்கம் கொண்டு வந்துவிடுவார் பாண்டியா. மெதுவான ஆடுகளங்களில் நன்கு பந்துவீசவும் செய்கிறார்.  நல்ல பீல்டராகவும் உள்ள பாண்டியாவின் ஆட்டத்தைக் காண ஆவலாக உள்ளேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.