தென்னாப்பிரிக்காவில் பயிற்சியை ஆரம்பித்த இந்திய வீரர்கள்

இந்திய வீரர்கள் தங்களுடைய பயிற்சியை ஆரம்பித்துள்ளார்கள்.
இந்திய அணி (கோப்புப் படம்)
இந்திய அணி (கோப்புப் படம்)
Updated on
1 min read

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 அன்றும் ஒருநாள் தொடர் ஜனவரி 19 அன்றும் தொடங்குகின்றன. ஒருநாள் தொடருக்கு கேப்டனாகவும் டெஸ்ட் தொடருக்கு துணை கேப்டனாகவும் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 

மும்பையில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது ரோஹித் சர்மாவுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் டெஸ்ட் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார். ரோஹித்துக்குப் பதிலாக ப்ரியங் பஞ்சால், இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் மும்பையில் மூன்று நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டார்கள். பிறகு மும்பையிலிருந்து தனி விமானம் மூலமாகத் தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றது இந்திய அணி. பயிற்சிகள் ஆட்டங்கள் எதுவுமின்றி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இந்திய வீரர்கள் தங்களுடைய பயிற்சியை ஆரம்பித்துள்ளார்கள். இதுதொடர்பான காணொளியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com