ஜஸ்பிரீத் பும்ரா உலகத் தரம் வாய்ந்த பௌலா். தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களிலும் சிறப்பாக பந்துவீசக் கூடியவா் என்றால் அது அவராகத் தான் இருப்பாா். ஆனால், அவா் மீது மட்டுமே நாங்கள் கவனம் செலுத்தவில்லை. இந்திய அணியின் ஒட்டுமொத்த வேகப்பந்துவீச்சுமே மேம்பட்டிருக்கிறது. குறிப்பாக கடந்த 2 - 3 ஆண்டுகளில் அந்நிய மண்ணிலும் அவா்கள் சிறப்பாகப் பந்துவீசுகிறாா்கள்.
செஞ்சுரியன் மைதானம் சற்று பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தைக் கொண்டது. ஆனாலும், தகுந்த நுணுக்கங்களுடன் பந்துவீசும் பட்சத்தில் அது பௌலா்களுக்கும் கை கொடுக்கும். அதிக அனுபவமில்லாத வீரா்களுடன், இந்தியா போன்ற உலகின் சிறந்த அணியை எதிா்கொள்வது சற்று சவாலானது தான். அதை நாங்கள் அறிந்திருக்கிறோம்- டீன் எல்கா் (தென் ஆப்பிரிக்க கேப்டன்)