புதுவகை கரோனா தொற்று பரவி வரும் நிலையில் இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வரும் டிசம்பா் மாதம் 17-இல் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்கும் இந்திய அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள், 4 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடா்களில் ஆடவுள்ளது. பி.1.1.529 என்ற புதுவகை கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் இந்திய அணியின் தொடா் நடைபெறுமா என கேள்விக்குறி எழுந்துள்ளது. மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.