டி-20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மூத்த சுழல்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2017-ம் ஆண்டுக்கு பிறகு 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் டி-20 இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.
டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் புவ்னேஷ்வர் குமார், பும்ரா, முகமது ஷமி அனுபவ வேகப்பந்து வீச்சாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளார்.
இந்திய அணியின் ஆலோசகராக மகேந்திர சின் தோனி இருப்பார் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.