ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அணியில் புஜாரா, ரஹானே இடம்: என்ன சொல்கிறார் கோலி?

இந்திய அணியில் சேத்தேஷ்வர் புஜாரா மற்றும் அஜின்க்யா ரஹானேவின் இடம் குறித்து நேரடியாகக் கருத்து தெரிவிக்காத கேப்டன் விராட் கோலி பேட்டிங்கே தோல்விக்குக் காரணம் என்பது போல கருத்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :14 ஜனவரி 2022, 3:55 pm

DIN


இந்திய அணியில் சேத்தேஷ்வர் புஜாரா மற்றும் அஜின்க்யா ரஹானேவின் இடம் குறித்து நேரடியாகக் கருத்து தெரிவிக்காத கேப்டன் விராட் கோலி பேட்டிங்கே தோல்விக்குக் காரணம் என்பது போல கருத்து தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுடனான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. 

இந்த நிலையில் கேப்டன் விராட் கோலி இதுபற்றி பேசுகையில், "கடந்த இரண்டு டெஸ்ட் ஆட்டங்களில் பேட்டிங் கைகொடுக்கவில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை நான் இங்கிருந்து கூற முடியாது (புஜாரா மற்றும் ரஹானே குறித்து).

நான் முன்பு கூறியதுதான். மீண்டும் கூறுகிறேன். கடந்த காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாரா மற்றும் ரஹானே சாதித்தைக் கருத்தில் கொண்டு தொடர்ச்சியாக அவர்களுக்கு ஆதரவாக இருந்து வந்தோம். தென் ஆப்பிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் இருவரும் முக்கியமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதுபோன்ற ஆட்டங்களையே நாங்கள் அங்கீகரிப்போம். ஆனால், தேர்வுக் குழுவினர் மனதில் என்ன இருக்கிறது, அவர்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்பது பற்றி நான் இங்கிருந்து கூற முடியாது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.