அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.
அயர்லாந்துக்கு எதிரான இரு டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடுகிறது. டப்லினில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் மழை காரணமாக இரு அணிகளுக்கும் தலா 12 ஓவர்கள் வழங்கப்பட்டன. டாஸ் வென்ற பாண்டியா தலைமையிலான இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. உம்ரான் மாலிக் இந்திய அணியில் அறிமுகம் ஆனார்.
அயர்லாந்து அணி, 12 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது. ஹேரி டெக்டர் 33 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். உம்ரான் மாலிக் ஒரு ஓவர் வீசி 14 ரன்கள் கொடுத்தார். இந்திய அணி 9.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. தீபக் ஹூடா 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சிறப்பாகப் பந்துவீசிய சஹால், ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.
2-வது டி20 ஆட்டம் நாளை நடைபெறுகிறது.