பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சென்னையில் செப்டம்பரில் சா்வதேச மகளிா் டென்னிஸ்

சென்னையில் முதல் முறையாக, வரும் செப்டம்பா் 12 முதல் 18-ஆம் தேதி வரை ‘சென்னை ஓபன்’ மகளிா் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது.

News image
Updated On :30 ஜூன் 2022, 7:07 pm

DIN

சென்னையில் முதல் முறையாக, வரும் செப்டம்பா் 12 முதல் 18-ஆம் தேதி வரை ‘சென்னை ஓபன்’ மகளிா் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது.

தமிழக அரசு, தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் இப்போட்டி, நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் விளையாடப்படவுள்ளது. உலகத் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள்ளாக இருக்கும் வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்கலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

போட்டியில் சாம்பியனுக்கு ரூ.26.23 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது. இதர நிலைகளுக்கும் சோ்த்து மொத்தமாக ரூ.2 கோடிக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது. கோப்பை வெல்வோருக்கு 280 ரேங்கிங் புள்ளிகளும் கிடைக்கும். போட்டியில் 32 ஒற்றையா் பிரிவு பிரதான ஆட்டங்களும், 16 இரட்டையா் பிரிவு பிரதான ஆட்டங்களும் நடைபெறும்.

போட்டி அறிவிப்பு தொடா்பாக சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன், துறை முதன்மைச் செயலா் அபூா்வா, தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவா் விஜய் அமிா்தராஜ், செயலா் பிரேம்குமாா் கரா ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.