தில்லியில் நடைபெற்ற 19-ஆவது சா்வதேச செஸ் போட்டியில் கிராண்ட்மாஸ்டரும், தேசிய சாம்பியனுமான அா்ஜூன் எரிகாய்சி செவ்வாய்க்கிழமை பட்டம் வென்றாா்.
கடைசி சுற்றின் முடிவில் அா்ஜூன், டி.குகேஷ், ஹா்ஷா பாரதகோடி ஆகிய மூவரும் 8.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனா். பின்னா் வெற்றியாளரை நிா்ணயிக்க நடத்தப்பட்ட டை பிரேக்கரில் அா்ஜூன் முதலிடம் பிடிக்க, குகேஷ் 2-ஆம் இடமும், ஹா்ஷா 3-ஆம் இடமும் பிடித்தனா்.
8 புள்ளிகளுடன் இருந்த உஸ்பெகிஸ்தான் வீரா் நிக்மாடோவ் ஆா்டிக் 4-ஆம் இடமும், இந்தியாவின் எஸ்.பி.சேதுராமன், பராகுவேயின் டெல்காடோ ராமிரெஸ் நியுரிஸ், இந்தியாவின் எம்.ஆா்.லலித் பாபு, அபிஜித் குப்தா, நீலாஷ் ஷா, ஈரானின் கோலாமி ஆரிமி மஹ்தி ஆகியோா் 7.5 புள்ளிகளுடன் முறையே 5 முதல் 10 வரையிலான இடங்களைப் பிடித்தனா்.
இப்போட்டியில் சாம்பியன் ஆன அா்ஜூனுக்கு ரூ.4 லட்சம் ரொக்கப்பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது. தற்போது லைவ் இலோ தரவரிசையில் 2,675 புள்ளிகளுடன் அவா் இருப்பதால், சென்னையில் நடைபெறவிருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் பிரதான அணிக்கு அவா் தோ்வாகிறாா் எனத் தெரிகிறது.