நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கடைசி டி20: இந்தியாவிற்கு 228 ரன்கள் இலக்கு! 

இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான கடைசி டி20 ஆட்டத்தில் இந்தியாவிற்கு 228 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

News image
சதமடித்த தென்னாப்பிரிக்க வீரர்
Updated On :4 அக்டோபர் 2022, 3:30 pm

DIN

இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான கடைசி டி20 ஆட்டத்தில் இந்தியாவிற்கு 228 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டி இன்று இந்தூரில் நடைபெறுகிறது. ஏற்கனவே தொடரை இந்திய அணி 2 போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 20 ஒவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரூசோவ் 48 பந்துகளில் 100 ரன்களை அடித்து அசத்தினார். இதில் 8 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். டி காக் 43 பந்துகளில் 68 ரன்களும், டேவிட் மில்லர் 5 பந்துகளில் 19 ரன்களும் எடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.