கடைசி டி20: இந்தியாவிற்கு 228 ரன்கள் இலக்கு!
இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான கடைசி டி20 ஆட்டத்தில் இந்தியாவிற்கு 228 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான கடைசி டி20 ஆட்டத்தில் இந்தியாவிற்கு 228 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டி இன்று இந்தூரில் நடைபெறுகிறது. ஏற்கனவே தொடரை இந்திய அணி 2 போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 20 ஒவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரூசோவ் 48 பந்துகளில் 100 ரன்களை அடித்து அசத்தினார். இதில் 8 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். டி காக் 43 பந்துகளில் 68 ரன்களும், டேவிட் மில்லர் 5 பந்துகளில் 19 ரன்களும் எடுத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...