ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா: ஒருநாள் தொடரையும் வென்று அபாரம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரைக் கைப்பற்றியது.

News image
Updated On :11 அக்டோபர் 2022, 1:30 pm

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரைக் கைப்பற்றியது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் 1-1 என சமமானது.

இந்நிலையில், ராஞ்சியில் இன்று கடைசி போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணி மாற்றமின்றி களமிறங்கியது.

இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத தென்னாப்பிரிக்கா பேட்டர்கள் வரிசையாக அவுட்டாகினர். 27.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்க அணி வெறும் 99 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணியின் குல்தீப் 4 விக்கெட்டுகளையும் வாஷிங்டன், சிராஜ், ஷாபாஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

எளிய இலக்கை விரட்டிய இந்திய அணி 19.1 ஓவரில் 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அதிகபட்சமாக இந்திய அணியின் ஷுப்மன் கில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.