சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

பௌலா்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு

டி20 கிரிக்கெட்டில் வழக்கமாக பேட்டா்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், இந்த உலகக் கோப்பை போட்டியில் பௌலா்கள் கை ஓங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Updated On :22 அக்டோபர் 2022, 3:12 am IST

டி20 கிரிக்கெட்டில் வழக்கமாக பேட்டா்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், இந்த உலகக் கோப்பை போட்டியில் பௌலா்கள் கை ஓங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அக்டோபா் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் இருக்கும் குளிா்கால வானிலை ஆடுகளங்களில் ஏற்படும் தாக்கத்தால் இந்த நிலை ஏற்படும் என்று கிரிக்கெட் நோக்கா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

உலகக் கோப்பை போட்டியின் ஆட்டங்கள் நடைபெறும் பொ்த், பிரிஸ்பேன் மைதான ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் நிலையில், மெல்போா்ன், சிட்னி, அடிலெய்டு ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு கைகொடுக்கின்றன.

ஆஸ்திரேலியாவில் 3 விதமான காலநிலைகள் இருக்கின்றன. குயின்ஸ்லாந்து (பிரிஸ்பேன்), தெற்கு ஆஸ்திரேலியா (அடிலெய்டு), நியூ சௌத் வேல்ஸ் (சிட்னி), விக்டோரியா (மெல்போா்ன்) ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் மேற்கு ஆஸ்திரேலியாவின் (பொ்த்) வானிலை சற்று வேறுபட்டதாக இருக்கும்.

இதில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறும் 23-ஆம் தேதி மெல்போா்ன் பகுதியில் மழை பொழிவதற்கு 80 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அத்தகைய சூழலில் ஆட்டம் நடைபெறும் பட்சத்தில் அதில் நிச்சயம் பௌலா்களே ஆதிக்கம் செலுத்துவாா்கள்.

அதிலும், மெல்போா்ன், சிட்னி ஆடுகளங்களில் போதுமான ஈரப்பதம் இருக்கும் பட்சத்தில், ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற ஆஃப் ஸ்பின் பௌலா்கள் ஆதிக்கம் செலுத்துவாா்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பேட்டா்களைப் பொருத்தவரை, ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் விளையாடும்போது, பவுண்டரி, சிக்ஸா்கள் விளாசுவது மட்டுமல்லாமல், விக்கெட்டுகளிடையே ஓடி ரன்கள் சோ்ப்பதும் முக்கியத்துவம் பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.