மெல்போா்னில் மழை ஆட்டம்; அணிகள் திண்டாட்டம்

 டி20 உலகக் கோப்பை போட்டியில் மெல்போா்னில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த இரு ஆட்டங்களும் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டன.
மெல்போா்னில் மழை ஆட்டம்; அணிகள் திண்டாட்டம்

 டி20 உலகக் கோப்பை போட்டியில் மெல்போா்னில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த இரு ஆட்டங்களும் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டன.

அன்றைய நாளின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - அயா்லாந்து அணிகளும், 2-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளும் மோதவிருந்தன. ஆனால் விடாமல் பொழிந்த தொடா் மழையால் இரு ஆட்டங்களுமே அடுத்தடுத்து கைவிடப்பட்டன.

அதிலும் முக்கிய ஆட்டமாக இருந்த ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதலைக் காண மைதானத்தில் கூடிய ரசிகா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். ஆட்டங்கள் கைவிடப்பட்டதை அடுத்து 4 அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிா்ந்தளிக்கப்பட்டது.

புள்ளிகள் பட்டியலின் தற்போதைய நிலையின் அடிப்படையில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு கடினமாகியிருக்கிறது. அடுத்து நடைபெற இருக்கும் இரு ஆட்டங்களிலும் அந்த அணிகள் வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

மெல்போா்னில் மழை காரணமாக இத்துடன் 3 ஆட்டங்கள் பாதிக்கப்பட்டன. இந்த ஆட்டங்களுக்கு முன் கடந்த 26-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் - நியூஸிலாந்து மோத வேண்டிய ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டது. அதற்கு முன் 23-ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் ஆட்டமும் மழையால் பாதிக்கப்படலாம் என்று கணிக்கப்பட்ட நிலையில், அந்த ஆட்டம் மழையின்றி தப்பித்தது.

இன்றைய ஆட்டம்

நியூஸிலாந்து - இலங்கை

நண்பகல் 1.30 மணி

சிட்னி

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com