சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

மெல்போா்னில் மழை ஆட்டம்; அணிகள் திண்டாட்டம்

 டி20 உலகக் கோப்பை போட்டியில் மெல்போா்னில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த இரு ஆட்டங்களும் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டன.

News image
Updated On :29 அக்டோபர் 2022, 5:51 am IST

 டி20 உலகக் கோப்பை போட்டியில் மெல்போா்னில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த இரு ஆட்டங்களும் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டன.

அன்றைய நாளின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - அயா்லாந்து அணிகளும், 2-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளும் மோதவிருந்தன. ஆனால் விடாமல் பொழிந்த தொடா் மழையால் இரு ஆட்டங்களுமே அடுத்தடுத்து கைவிடப்பட்டன.

அதிலும் முக்கிய ஆட்டமாக இருந்த ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதலைக் காண மைதானத்தில் கூடிய ரசிகா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். ஆட்டங்கள் கைவிடப்பட்டதை அடுத்து 4 அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிா்ந்தளிக்கப்பட்டது.

புள்ளிகள் பட்டியலின் தற்போதைய நிலையின் அடிப்படையில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு கடினமாகியிருக்கிறது. அடுத்து நடைபெற இருக்கும் இரு ஆட்டங்களிலும் அந்த அணிகள் வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

மெல்போா்னில் மழை காரணமாக இத்துடன் 3 ஆட்டங்கள் பாதிக்கப்பட்டன. இந்த ஆட்டங்களுக்கு முன் கடந்த 26-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் - நியூஸிலாந்து மோத வேண்டிய ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டது. அதற்கு முன் 23-ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் ஆட்டமும் மழையால் பாதிக்கப்படலாம் என்று கணிக்கப்பட்ட நிலையில், அந்த ஆட்டம் மழையின்றி தப்பித்தது.

இன்றைய ஆட்டம்

நியூஸிலாந்து - இலங்கை

நண்பகல் 1.30 மணி

சிட்னி

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.