பிரசித் கிருஷ்ணா விலகல்: இந்திய ஏ அணியில் ஆல்ரவுண்டர் சேர்ப்பு

வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்குக் காயம் ஏற்பட்டதையடுத்து இந்திய ஏ அணியில் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டுள்ளார்.
பிரசித் கிருஷ்ணா விலகல்: இந்திய ஏ அணியில் ஆல்ரவுண்டர் சேர்ப்பு

வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்குக் காயம் ஏற்பட்டதையடுத்து இந்திய ஏ அணியில் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணி ஏ அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 நான்கு நாள் ஆட்டங்களிலும் 3 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாடுகிறது. 

பெங்களூரில் நடைபெற்ற முதல் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டம் டிரா ஆனது. இந்நிலையில் முதுகு வலி காரணமாக இந்தத் தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா விலகியுள்ளார். இதையடுத்து ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்குர் இந்திய ஏ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் ஆட்டத்தில் பிரசித் கிருஷ்ணா விளையாடவில்லை. தாய்லாந்தில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருக்கும் ஷர்துல் தாக்குர், இந்திய ஏ அணியினருடன் விரைவில் இணையவுள்ளார். 

இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகளுக்கிடையிலான 2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட், செப்டம்பர் 8 அன்று தொடங்குகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com