சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

கோப்பை யாருக்கு? பாகிஸ்தான் பந்துவீச்சு

ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கிய ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டி இன்று (செப்டம்பர் 11) துபை சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 1:36 pm

ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கிய ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டி இன்று (செப்டம்பர் 11) துபை சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து, இலங்கை அணி முதலில் பேட் செய்கிறது.

சூப்பர் 4 போட்டியில் இலங்கை அணி விளையாடிய 3 போட்டிகளிலுமே வெற்றி பெற்று அசத்தியது. அந்த அணி சூப்பர் 4 சுற்றின் கடைசிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. அதே உத்வேகத்தில் இன்றைய இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் முனைப்போடு களமிறங்குகிறது இலங்கை அணி. 

இந்த ஆசியக் கோப்பை முழுவதும் பாகிஸ்தான் அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடைசியாக இலங்கை அணியுடனான சூப்பர் 4 சுற்றில் தோல்வியைத் தவிர்த்து அந்த அணி விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. கடந்தப் போட்டியில் இலங்கையிடம் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், ஆசியக் கோப்பையை கைப்பற்றும் முனைப்போடும் களமிறங்குகிறது பாகிஸ்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.