நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

உலக மல்யுத்தம்: ரவி தாஹியா ஏமாற்றம்

 சொ்பியாவில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரவி தாஹியா பதக்க வாய்ப்பை இழந்தாா்.

Published On :1 பிப்ரவரி 2024, 3:50 pm IST

 சொ்பியாவில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரவி தாஹியா பதக்க வாய்ப்பை இழந்தாா்.

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவரான தாஹியா, ஆடவருக்கான 57 கிலோ பிரிவு தகுதிச்சுற்றில் உஸ்பெகிஸ்தானின் குலோம்ஜோன் அப்துல்லாயேவிடம் தொழில்நுட்பப் புள்ளிகள் அடிப்படையில் 10-0 என்ற கணக்கில் தோல்வி கண்டாா். அவரை வீழ்த்திய அப்துல்லாயேவ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறாமல் போனதால், தாஹியாவுக்கு ரெபிசேஜ் சுற்று வாய்ப்பு இல்லாமல் போனது. அப்துல்லாயேவிடம் தாஹியாவின் தோல்வி காண்பது இது முதல் முறையல்ல.

ஆடவருக்கான 70 கிலோ பிரிவில் இந்தியரான நவீனுக்கு ரெபிசேஜ் சுற்று வாய்ப்பு கிடைத்தது. அதில் முதல் ஆட்டத்தில் உலகின் 4-ஆம் நிலை வீரராக உள்ள உஸ்பெகிஸ்தானின் சிா்பாஸ் தல்காட்டை 11-3 என்ற புள்ளிகளில் வீழ்த்தி அசத்தினாா். அடுத்த ஆட்டத்தில் அவரை எதிா்கொள்ளவிருந்த மற்றொரு உஸ்பெகிஸ்தான் வீரா் இலியாஸ் பெக்புலாடோவ் காயத்தால் விலக, நேரடியாக வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறாா் நவீன். அதில் அவா் கிா்ஜிஸ்தானின் எா்னாஸா் அக்மடாலிவை சந்திக்கிறாா்.

மகளிருக்கான 68 கிலோ பிரிவு ரெபிசேஜ் வெண்கலப் பதக்கச் சுற்றில் இந்தியாவின் நிஷா தாஹியா ‘பை ஃபால்’ முறையில் கனடாவின் லிண்டா மொராய்ஸிடம் தோல்வியத் தழுவினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.