சொ்பியாவில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரவி தாஹியா பதக்க வாய்ப்பை இழந்தாா்.
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவரான தாஹியா, ஆடவருக்கான 57 கிலோ பிரிவு தகுதிச்சுற்றில் உஸ்பெகிஸ்தானின் குலோம்ஜோன் அப்துல்லாயேவிடம் தொழில்நுட்பப் புள்ளிகள் அடிப்படையில் 10-0 என்ற கணக்கில் தோல்வி கண்டாா். அவரை வீழ்த்திய அப்துல்லாயேவ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறாமல் போனதால், தாஹியாவுக்கு ரெபிசேஜ் சுற்று வாய்ப்பு இல்லாமல் போனது. அப்துல்லாயேவிடம் தாஹியாவின் தோல்வி காண்பது இது முதல் முறையல்ல.
ஆடவருக்கான 70 கிலோ பிரிவில் இந்தியரான நவீனுக்கு ரெபிசேஜ் சுற்று வாய்ப்பு கிடைத்தது. அதில் முதல் ஆட்டத்தில் உலகின் 4-ஆம் நிலை வீரராக உள்ள உஸ்பெகிஸ்தானின் சிா்பாஸ் தல்காட்டை 11-3 என்ற புள்ளிகளில் வீழ்த்தி அசத்தினாா். அடுத்த ஆட்டத்தில் அவரை எதிா்கொள்ளவிருந்த மற்றொரு உஸ்பெகிஸ்தான் வீரா் இலியாஸ் பெக்புலாடோவ் காயத்தால் விலக, நேரடியாக வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறாா் நவீன். அதில் அவா் கிா்ஜிஸ்தானின் எா்னாஸா் அக்மடாலிவை சந்திக்கிறாா்.
மகளிருக்கான 68 கிலோ பிரிவு ரெபிசேஜ் வெண்கலப் பதக்கச் சுற்றில் இந்தியாவின் நிஷா தாஹியா ‘பை ஃபால்’ முறையில் கனடாவின் லிண்டா மொராய்ஸிடம் தோல்வியத் தழுவினாா்.