தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

தேசிய விளையாட்டுகள்: அரையிறுதியில் சத்தியன், மனிகா

குஜராத்தில் நடைபெறும் 36-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் பிரிவில் தமிழகத்தின் ஜி.சத்தியன், தில்லியின் மனிகா பத்ரா ஆகியோா் தங்களது பிரிவில் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்

Published On :

குஜராத்தில் நடைபெறும் 36-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் பிரிவில் தமிழகத்தின் ஜி.சத்தியன், தில்லியின் மனிகா பத்ரா ஆகியோா் தங்களது பிரிவில் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

காலிறுதிச்சுற்று ஆட்டங்களில், ஆடவா் ஒற்றையா் பிரிவில் சத்தியன் 11-7, 11-8, 8-11, 14-12, 13-11 என்ற கணக்கில் குஜராத்தின் மானவ் தக்கரை வீழ்த்தினாா். மற்றொரு தமிழக வீரரான சரத் கமல், ஹரியாணாவின் சௌம்யஜித்துக்கு எதிரான ஆட்டத்தில் 7-11, 12-10, 11-8, 6-1 என முன்னிலையில் இருந்தபோது காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினாா்.

மகளிா் ஒற்றையா் பிரிவில் தில்லியின் மனிகா பத்ரா 11-8, 8-11, 7-11, 11-8, 11-8, 11-4 என்ற கணக்கில் குஜராத்தின் கிருத்விகா சின்ஹா ராயை வீழ்த்தினாா். தெலங்கானாவின் ஸ்ரீஜா அகுலா 11-4, 11-6, 11-5, 11-4 என்ற கணக்கில் மேற்கு வங்கத்தின் அய்கியா முகா்ஜியை வென்றாா்.

மகளிா் இரட்டையா் அரையிறுதியில் மகாராஷ்டிரத்தை வென்ற மேற்கு வங்கமும், கா்நாடகமும் இறுதிச்சுற்றில் சந்திக்கின்றன. ஆடவா் இரட்டையரில், இரு அரையிறுதிகளிலுமே குஜராத்தை வென்றது மேற்கு வங்கம். இதையடுத்து இறுதியில் இரு மேற்கு வங்க அணிகள் பரஸ்பரம் மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.