மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

பட்லர் அதிரடி: பெங்களூரு அணிக்கு 170 ரன்கள் இலக்கு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

News image
Updated On :5 ஏப்ரல் 2022, 4:00 pm

DIN

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் போட்டியின் 13வது ஆட்டம் மும்பை வான்கடே திடலில் நடைபெற்று வருகிறது.  இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.  இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஜெய்ஸ்வால் 6 பந்துகளில் வெளியேற அதற்கடுத்து வந்த படிக்கல், ஜோஸ் பட்லருடன் நிலைத்து ஆடினார். இதனால் படிக்கல் 29 பந்துகளில் 37 ரன்களை எடுத்தார். அதனைத் தொடர்ந்து வந்த சஞ்சு சாம்சன் 8 ரன்களில் வெளியேற அதற்கடுத்து வந்த ஷிம்ரோன் ஹிட்மயர், பட்லருடன் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

ஆரம்பம் முதலே நிலைத்து ஆடிவந்த ஜோஸ் பட்லர் அரை சதம் கடந்து அணியின் ரன் வேகத்தைக் கூட்டினார். அவர் 47 பந்துகளில் 70 ரன்களைக் குவித்தார். ஹிட்மயர் 31 பந்துகளுக்கு 42 ரன்களை சேர்த்தார். இறுதியில் 20 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை எடுத்தது. இதனால் பெங்களூரு அணிக்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.