ஒருநாள் தரவரிசை: ஷுப்மன் கில் முன்னேற்றம்

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய இளம் பேட்டர் ஷுப்மன் கில் 38-வது இடத்தைப் பிடித்துள்ளார். 
ஒருநாள் தரவரிசை: ஷுப்மன் கில் முன்னேற்றம்

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய இளம் பேட்டர் ஷுப்மன் கில் 38-வது இடத்தைப் பிடித்துள்ளார். 

ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது ஆட்டத்தில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியிருக்கிறது இந்தியா. இந்தியாவின் ஷுப்மன் கில் ஆட்டநாயகன், தொடர்நாயகன் ஆனார். சிறப்பாக விளையாடிய 22 வயது ஷுப்மன் கில், 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 97 பந்துகளில் 1 சிக்ஸர், 15 பவுண்டரிகள் அடித்தார். இது அவருடைய முதல் ஒருநாள் சதம்.

ஜிம்பாப்வே நாட்டில் அதிக ஒருநாள் ரன்களை எடுத்த இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஷுப்மன் கில். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், 1998-ல் 127* ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அச்சாதனையை ஷுப்மன் கில் தாண்டியுள்ளார்.

இதன் காரணமாக ஒருநாள் தரவரிசையில் ஷுப்மன் கில் முன்னேற்றம் அடைந்துள்ளார். சமீபத்திய தரவரிசைப் பட்டியலில் அவர் 38-வது இடத்தைப் பிடித்துள்ளார். பாகிஸ்தானின் பாபர் ஆஸம் முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி 5-வது இடத்திலும் ரோஹித் சர்மா 6-வது இடத்திலும் உள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com