இந்திய ‘ஏ’ அணி கேப்டன் பிரியங்க் பஞ்சல்

நியூஸிலாந்து ‘ஏ’ அணியுடன் 4 நாள் ஆட்டங்கள் மூன்றில் மோதவிருக்கும் இந்திய ‘ஏ’ அணி 16 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
இந்திய ‘ஏ’ அணி கேப்டன் பிரியங்க் பஞ்சல்

நியூஸிலாந்து ‘ஏ’ அணியுடன் 4 நாள் ஆட்டங்கள் மூன்றில் மோதவிருக்கும் இந்திய ‘ஏ’ அணி 16 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

குஜராத் வீரா் பிரியங்க் பஞ்சல் தலைமையிலான இந்த அணியில், திலக் வா்மா, முகேஷ் குமாா், யஷ் தயால் ஆகிய புதிய வீரா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாகச் செயல்பட்ட மேற்கு வங்க வீரா் அபிமன்யு ஈஸ்வரன், மத்திய பிரதேசத்தின் ரஜத் பட்டிதாா், மும்பையின் சா்ஃப்ராஸ் கான் ஆகியோரும் இந்த அணியில் இணைந்திருக்கின்றனா்.

இந்தியா - நியூஸிலாந்து ‘ஏ’ அணிகள் மோதும் 3 ஆட்டங்களில் முதல் மற்றும் 3-ஆவது ஆட்டங்கள் பெங்களூரிலும், 2-ஆவது ஆட்டம் ஹுப்பள்ளியிலும் நடைபெறவுள்ளன. அந்த அணிகள் மோதும் 3 ஒன் டே ஆட்டங்கள் சென்னையில் நடைபெறவுள்ளன. அதற்கான அணி பின்னா் அறிவிக்கப்படவுள்ளது.

இந்திய ‘ஏ’ அணி: பிரியங்க் பஞ்சல் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட், ரஜத் பட்டிதாா், சா்ஃப்ராஸ் கான், திலக் வா்மா, கே.எஸ்.பரத், உபேந்திர யாதவ், குல்தீப் யாதவ், சௌரவ் குமாா், ராகுல் சஹா், பிரசித் கிருஷ்ணா, உம்ரான் மாலிக், முகேஷ் குமாா், யஷ் தயால், அஸான் நாக்வாஸ்வல்லா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com