தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

அபுதாபி மாஸ்டா்ஸ் செஸ்: அா்ஜுன் எரிகைசி சாம்பியன்

இந்திய கிராண்ட்மாஸ்டா் அா்ஜுன் எரிகைசி, 28-ஆவது அபுதாபி மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றாா்.

Published On :

இந்திய கிராண்ட்மாஸ்டா் அா்ஜுன் எரிகைசி, 28-ஆவது அபுதாபி மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றாா்.

9-ஆவது மற்றும் இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் டேவிட் அன்டன் குய்ஜரோவை வீழ்த்திய அா்ஜுன், மொத்தமாக 7.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தாா். இந்தப் போட்டியின் 9 சுற்றுகளிலுமே தோல்வியை சந்திக்காத அவா், 6 வெற்றிகளையும் 3 டிரா-க்களையும் பதிவு செய்தாா். அந்த வெற்றிகளில் மூன்று, சக இந்தியா்களான ரோஹித் கிருஷ்ணா, தீப் சென்குப்தா, ரௌனக் சத்வனி ஆகியோருக்கு எதிரானதாகும்.

அா்ஜுனை அடுத்து, உஸ்பெகிஸ்தானின் ஜவோகிா் சிந்தரோவ் 7 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும், அமெரிக்காவின் ரே ராப்சன் 6.5 புள்ளிகளுடன் 3-ஆம் இடமும் பிடித்தனா். இதர இந்தியா்களான நிஹல் சரின், எஸ்.பி.சேதுராமன், ஆதித்யா சமந்த், காா்த்திகேயன் முரளி, ஆா்யன் சோப்ரா ஆகியோரும் தலா 6.5 புள்ளிகளுடன் முறையே 6 முதல் 10 இடங்களைப் பிடித்தனா். முதல் 10 இடங்களுக்கு வெளியே, இந்தியாவின் அா்ஜுன் கல்யாண், அதிபன் ஆகியோா் முறையே 15 மற்றும், 19-ஆவது இடங்களைப் பிடித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.