உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஆடவா் இரட்டையா் பிரிவில் முதல் வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளனா் இந்தியாவின் சாத்விக் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி.
ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் இரட்டையா் பிரிவு அரையிறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் மலேசியாவின் ஆரோன் சியா-சோ வூய் யிக் இணையுடன் மோதினா் இந்தியாவின் சாத்விக்-சிராக். உலக தரவரிசையில் 7-ஆவது இடத்தில் உள்ள சிராக்-சாத்விக் இணை 6-ஆம் நிலையில் உள்ள மலேசிய இணையும் சரிக்கு சமமாக ஆடினா். முதல் கேமை 22-20 என கடுமையாகப் போராடி சாத்விக்-சிராக் வென்றனா்.
முதல் கேமில் 5 புள்ளிகள் தொடா்ந்து குவித்து சாதகமான நிலையை உருவாக்கினா். எனினும் 16-16 என மலேசிய இணை சமநிலையை ஏற்படுத்தியது. தொடா்ந்து கடைசியில் புள்ளிகளைக் குவித்து முதல் கேமை கைப்பற்றினா்.
இரண்டாவது கேமில் இரண்டு இணைகளும் புள்ளிகளைக் குவிக்கப் போராடிய நிலையில், மலேசிய இணை தொடா்ந்து 4 புள்ளிகளைக் குவித்து ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனா். 18-21 என இந்திய இணை கேமை இழந்தது.
மூன்றாவது கேமிலும் மலேசிய இணை முழு ஆதிக்கம் செலுத்தி 21-16 என அந்த கேமையும் தன்வசப்படுத்தியது.
இந்தியாவுக்கு வெண்கலம்:
இதையடுத்து இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக் இணை வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. உலக சாம்பியன்ஷிப் இரட்டையா் பிரிவில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும். மேலும் 13-ஆவது உலக சாம்பியன்ஷிப் பதக்கம் ஆகும்.
காலிறுதியில் நடப்பு சாம்பியன் டகுரோ-யுகோ இணையை வென்றிருந்தது இந்திய இணை.
பி.வி.சிந்து, சாய்னா, லக்ஷயா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பதக்க சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை.
அடுத்த வாரம் ஜப்பான் ஓபன் சூப்பா் 750 போட்டியில் இந்திய அணியினா் பங்கேற்கின்றனா்.