வங்கதேசத்துக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்டிலிருந்து பிரபல வீரர் ரோஹித் சர்மா விலகியுள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டை 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட், மிர்பூரில் டிசம்பர் 22 அன்று தொடங்குகிறது.
ஒருநாள் தொடரில் ஃபீல்டிங் செய்தபோது கேப்டன் ரோஹித் சர்மாவுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் முதல் டெஸ்டில் அவர் இடம்பெறவில்லை. காயத்துக்காக மும்பையில் சிகிச்சை பெற்று வந்த ரோஹித் சர்மா, 2-வது டெஸ்டிலிருந்தும் விலகியுள்ளார். இதையடுத்து கடைசி டெஸ்டிலும் கே.எல். ராகுல் இந்திய அணியின் கேப்டனாகச் செயல்படவுள்ளார்.