இந்திய அணியின் ரவிச்சந்தின் அஸ்வின் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 3000 ரன்கள் மற்றும் 400 விக்கெட்டுகள் எடுத்த 6-வது வீரர் என்ற புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.
இதையும் படிக்க: தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய காஷ்மீர் இஸ்லாமியர்கள்!
இதற்கு முன்னதாக கபில் தேவ், ஷான் பொல்லாக், ஸ்டூவர்ட் பிராட், ஷேன் வார்னே மற்றும் சர் ரிச்சர்ட் ஹாட்லி ஆகிய 5 கிரிக்கெட் வீரர்களும் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். அந்த வரிசையில் 6-வது வீரராக தமிழக வீரர் அஸ்வின் இணைந்துள்ளார்.
இந்த சாதனையை அவர் வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளின்போது படைத்தார். அதேபோல டெஸ்ட் போட்டிகளில் குறுகிய காலத்தில் 450 விக்கெட்டுகளைக் கடந்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைக்க உள்ளார். தற்போது அவர் டெஸ்ட் போட்டிகளில் 447 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இதையும் படிக்க: இரும்புப் பெண் சமந்தா: நடிகரின் அன்புப் பரிசு!
இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே குறைந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 450 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார். அவர் இந்த சாதனையை தான் விளையாடிய 93-வது டெஸ்ட் போட்டியில் படைத்திருந்தார்.
அனில் கும்ப்ளேவின் இந்த சாதனையை முறியடித்து டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 450 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைக்க அஸ்வினுக்கு இன்னும் 4 விக்கெட்டுகளே தேவைப்படுகின்றன.
வங்கதேசத்துக்கு எதிராக ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடிய இரண்டாவது டெஸ்ட் போட்டி அவரது 88-வது சர்வதேச டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.