பிரபல பிரேசில் முன்னாள் வீரர் ரொனால்டோவுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
45 வயது ரொனால்டோ, 4 உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடி இரண்டில் பிரேசில் அணிக்குக் கோப்பைகளைப் பெற்றுத் தந்துள்ளார். உலகக் கோப்பைப் போட்டியில் மட்டுமே 15 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில் ரொனால்டோ கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து ரொனால்டோ 16 வயதில் அறிமுகமான, முதல் கிளப்பான குருஸிரோவின் 101-வது ஆண்டுவிழாவில் அவரால் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கரோனா அறிகுறிகள் குறைவாக உள்ளதால் ரொனால்டோ தற்போது ஓய்வில் உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.