டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக விராட் கோலி அறிவித்ததையடுத்து, பிசிசிஐ செயலர் ஜெய் ஷா ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக விராட் கோலி இன்று (சனிக்கிழமை) மாலை அறிவித்தார்.
இதையும் படிக்க | டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் கோலி விலகல்
கோலியின் அறிவிப்பைப் பகிர்ந்து பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"சிறந்த தலைமைப் பண்பால் டெஸ்ட் அணியை இதுவரை இல்லாத உச்சத்துக்கு அழைத்துச் சென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு வாழ்த்துகள். அவர் 68 டெஸ்ட் ஆட்டங்களில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். 40 ஆட்டங்களில் வெற்றி பெற்று வெற்றிகரமான கேப்டனாக உள்ளார்."
ஜெய் ஷா:
"இந்திய அணிக்கு சிறப்பான கேப்டனாக இருந்த விராட் கோலிக்கு வாழ்த்துகள். சிறந்த உடற்தகுதியைக் கொண்ட கருணையற்ற அணியாக, கோலி மாற்றிய இந்திய அணி, இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சிறப்பாக செயல்பட்டது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் பெற்ற வெற்றி சிறப்பானது."