டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நான் இருக்கும் வரை அது நடக்காது: அணித் தேர்வு சர்ச்சை பற்றி மே.இ. தீவுகள் பயிற்சியாளர்

நான் இருக்கும்வரை அது நடக்காது. இந்த விவகாரம் தொடர்பாக நடக்கும் முட்டாள்தனத்தை நிறுத்த வேண்டும்.

News image
மே.இ. தீவுகள் அணி (கோப்புப் படம்)
Updated On :6 பிப்ரவரி 2024, 12:44 pm

DIN

இங்கிலாந்து அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது. டி20 தொடர் ஜனவரி 23 முதல் ஜனவரி 31 வரை நடைபெறுகிறது. டெஸ்ட் தொடர், மார்ச் 8 முதல் மார்ச் 28 வரை நடைபெறுகிறது. முதல் மூன்று ஆட்டங்களின் முடிவில் மே.இ. தீவுகள் அணி 2-1 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.

மே.இ. அணி வீரர்கள் பேசிக்கொண்ட ஆடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் கசிந்ததாகக் கூறப்படுகிறது. அணி வீரர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. 3-வது டி20 ஆட்டத்தில் ஓடியன் ஸ்மித் இடம்பெறாத காரணத்தால் இந்தச் சர்ச்சை உருவானதாகத் தெரிகிறது.

5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் முதல் இரு ஆட்டங்களில் ஓடியன் ஸ்மித் விளையாடினார். முதல் டி20யில் ஒரு ஓவர் வீசினார். 2-வது டி20யில் பேட்டிங்கில் 7 ரன்கள் எடுத்தார். 3-வது டி20 ஆட்டத்தில் பேட்டிங்கை வலுப்படுத்துவதற்காக ஸ்மித்தை நீக்கிவிட்டு ரோவ்மேன் பவலைச் சேர்த்தார்கள். அந்த ஆட்டத்தில் ரோவ்மேன் பவல், 53 பந்துகளில் 107 ரன்கள் எடுத்தார். 

இந்த விவகாரம் குறித்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் கூறியதாவது:

யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தவோ யாரையும் கீழே தள்ளவோ விரும்ப மாட்டோம். நான் இருக்கும்வரை அது நடக்காது. இந்த விவகாரம் தொடர்பாக நடக்கும் முட்டாள்தனத்தை நிறுத்த வேண்டும். அணிக்கு யார் சிறந்த வீரர்களாக இருப்பார்களோ அவர்களைத் தேர்வு செய்வோம். அணியில் ஓடியன்  இடம்பிடிக்கவில்லையென்றால் ரோவ்மேன் பவல் நன்றாக விளையாடுவார் என நாங்கள் எண்ணியதால் தான். மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட்டில் யாரையும் பாதிப்புக்கு ஆளாக விடமாட்டோம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.