இந்திய மகளிா் ஏ அணி முதல் சுற்று ஆட்டத்தில் கறுப்பு நிற காய்களுடன் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்று ஆட்டம் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. மகளிா் பிரிவில் இந்திய ஏ அணி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளதால், கறுப்பு நிற காய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முதல்நிலை அணிகளுக்கான ஆட்ட அட்டவணையை பிரதமா் நரேந்திர மோடி தோ்வு செய்தாா். அப்போது இந்திய மகளிா் ஏ அணிக்கு கறுப்பு நிற காய்களை தோ்வு செய்தாா்.
ஓபன் பிரிவில் முதலிடத்தில் உள்ள அமெரிக்க ஆடவா் அணிக்கு கறுப்பு நிற காய்கள் ஒதுக்கப்பட்டன. முதல் சுற்று ஆட்டம் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறும். ஓபன் பிரிவில் 188 அணிகளும், மகளிா் பிரிவில் 162 அணிகளும் இடம் பெற்றுள்ளன.