நார்வே செஸ்: கார்ல்சனை மீண்டும் தோற்கடித்த விஸ்வநாதன் ஆனந்த்

நார்வே செஸ் போட்டியில் உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்து முன்னிலை பெற்றுள்ளார் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்.
நார்வே செஸ்: கார்ல்சனை மீண்டும் தோற்கடித்த விஸ்வநாதன் ஆனந்த்
Updated on
1 min read

நார்வே செஸ் போட்டியில் உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்து முன்னிலை பெற்றுள்ளார் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்.

நார்வே செஸ் போட்டியில் பிளிட்ஸ் பிரிவில் கார்ல்சனை ஏற்கெனவே தோற்கடித்தார் ஆனந்த். இந்நிலையில் கிளாசிகல் பிரிவிலும் கார்ல்சனை அவர் தோற்கடித்துள்ளார். 

இருவருக்கிடையிலான 5-வது சுற்று ஆட்டம் 40 நகர்த்தல்களின் முடிவில் டிரா ஆனது. இதையடுத்து நடைபெற்ற ஆர்மகெடன் முறையிலான ஆட்டத்தில் கார்ல்சனை வீழ்த்தினார் ஆனந்த். இன்னும் நான்கு சுற்றுகள் மீதமுள்ள நிலையில் 10 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றுள்ளார் ஆனந்த். 9.5 புள்ளிகளுடன் கார்ல்சன் 2-ம் இடத்தில் உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com