ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

சிஎஸ்கே அணியில் விளையாட எல்லா வீரர்களும் விரும்புவது ஏன்?: என். சீனிவாசன் பதில்

சிஎஸ்கே அணியில் கடந்த 12, 13 வருடங்களாக யாரையும் நாங்கள் மாற்றவில்லை...

News image
Updated On :30 ஜூன் 2022, 10:15 am

ஐபிஎல் போட்டியில் அனைத்து வீரர்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற ஆர்வமாக இருக்கிறார்கள் என சிஎஸ்கே அணியின் உரிமையாளர் என். சீனிவாசன் கூறியுள்ளார்.

ஊடக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட என். சீனிவாசன், சிஎஸ்கே பற்றி கூறியதாவது:

ஐபிஎல் போட்டியில் எல்லா வீரர்களும் சிஎஸ்கே அணியில் விளையாட விருப்பம் தெரிவிக்கிறார்கள். ரகசியம் எதுவுமில்லை. வீரர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிறார்கள். சிஎஸ்கே அணியில் பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட், டிரெய்னர்... என கடந்த 12, 13 வருடங்களாக யாரையும் நாங்கள் மாற்றவில்லை. ஆனால் மற்ற அணிகளைப் பாருங்கள். அவர்களுக்குப் பலவிதமான வெற்றிகள் கிடைத்துள்ளன. ஆனால் அவர்கள் பலரை மாற்றியுள்ளார்கள். திறமையானவர்களை நாங்கள் தேர்வு செய்கிறோம். எனவே அவர்களுடைய திறமையில் நம்பிக்கை வைக்கிறோம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.