தேசிய செஸ்: அர்ஜூன் சாம்பியன்

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற 58-ஆவது சீனியர் தேசிய செஸ் சாம்பியன்ஷிப்பில் தெலங்கானாவின் அர்ஜூன் எரிகாய்சி வியாழக்கிழமை வாகை சூடினார். 
தேசிய செஸ்: அர்ஜூன் சாம்பியன்

கான்பூர்: உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற 58-ஆவது சீனியர் தேசிய செஸ் சாம்பியன்ஷிப்பில் தெலங்கானாவின் அர்ஜூன் எரிகாய்சி வியாழக்கிழமை வாகை சூடினார். 
11 சுற்றுகளின் முடிவில் அர்ஜூன், தமிழகத்தைச் சேர்ந்த டி.குகேஷ், பி.இனியன் ஆகிய மூவருமே 8.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட "டை-பிரேக்கர்'-இல் வெற்றி பெற்று அர்ஜூன் சாம்பியன் ஆனார். அவருக்கு ரூ.6 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 
குகேஷ் 2-ஆம் இடமும், இனியன் 3-ஆம் இடம் பிடிக்க, நடப்புச் சாம்பியனாக இருந்த மற்றொரு தமிழரான அரவிந்த் சிதம்பரம் 8 புள்ளிகளுடன் 4-ஆம் இடம் பிடித்தார். 
திவ்யா முதலிடம்: முன்னதாக, இப்போட்டியன் மகளிர் பிரிவில் மகாராஷ்டிரத்தின் திவ்யா தேஷ்முக் சாம்பியன் ஆக, சாக்ஷி சித்லாங்கே 2-ஆம் இடமும், ஆந்திரத்தின் பிரியங்கா நுடாகி 3-ஆம் இடமும் பிடித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com